மன்னார் மாவட்டத்தின் மிகப்பெரிய முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள மன்/எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயம் ஆனது தனது கிழக்கு மேற்கு எல்லைகளாக இரு பெரும் மாடிப் பள்ளிவாசல்களையும், குர்ஆன் மதுரசாக்களையும் கொண்டுள்ளது. வடக்கில் குடியிருப்புக்களையும், தெற்கில் கடற்கரையையும், நான்கு பக்கமும் பொதுப்பாதைகளையும் கொண்டமைந்த இப்பாடசாலை ஒரு தனி வளாகமாக கல்வி கற்பதற்குப் பொருத்தமான, அமைதியான, அழகான, ஒதுக்குப்புறமான சூழலைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறான சூழலையும் கொண்ட பாடசாலை ஈழத்திருநாட்டின் எப்பாகத்திலும் இல்லை என்று கூறலாம்.






